26.5 C
Jaffna
March 28, 2025
Pagetamil
இலங்கை

UPDATE: பழைய இரும்பு சேகரிப்பு நிலைய வெடிப்பின் பின்னணி!

அவிசாவளை, மாதொல பிரதேசத்தில் உள்ள பழைய உலோக சேகரிப்பு நிலையத்தில் நேற்று (06) நபர் ஒருவர் உயிரிழந்தமை, வெடிக்கும் துப்பாக்கிக் குழல் அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருளின் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குப்பைகள் சேகரிக்கப்படும் இந்த இடத்தில் நேற்று காலை தொழிலாளி ஒருவர் பிற்பகல் கொண்டு வரப்பட்ட பழைய இரும்பை தரம் பிரித்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் போதைக்கு அடிமையான நபர் ஒருவர் வனப்பகுதியில் இருந்ததாக குறிப்பிட்டு பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, கழிவுப் பொருட்களை பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களாக வகைப்படுத்திக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் வெடித்ததில் உயிரிழந்தார். பழுதான உலோகக் குழாயை பழைய உலோகங்கள் சேகரிக்கும் இடத்தில் வீசியதில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெடித்ததில், இறந்தவரின் மார்பில் ஏதோ ஒன்று தாக்கி பலத்த காயம் அடைந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மஸ்கெலியா கலேவெல வத்த பிரதேசத்தை சேர்ந்த கந்தசாமி ஜெகன் (வயது 48) என்ற கழிவு சேகரிப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரச பரிசோதகர் அலுவலக அதிகாரிகளும் அழைக்கப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சீதாவக்கா பிரிவு குற்றப்பிரிவு ஆய்வக அதிகாரிகளும் இந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். அங்கு, இந்த இடத்தில் ஹக்கபடஸ் போன்ற ஒன்று வெடித்துள்ளதாக ஊகித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (07) இடம்பெற உள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சீதாவக்க பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் அவிசாவளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது

Pagetamil

5 வருடங்களின் பின் பேஸ்புக்கால் சிக்கிய பொலிஸ் திருடன்!

Pagetamil

ஏப்ரல் 3 -10 வரை வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு: மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது!

Pagetamil

பிரித்தானியாவின் தடையால் கொதிக்கும் ஜேவிபி அரசு

Pagetamil

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!