இந்த ஏமாற்று ஜோடியை கண்டவர்கள் தகவல் தரவும்!

Date:

பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பத்தரமுல்லை வீதிப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைப்பதற்காக குறித்த நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாவை இந்த சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் பெற்றுக்கொண்ட தொகை 9,943,108.03 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெறுமதிக்கு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் இந்த சந்தேகநபர்கள் பணம் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதன்படி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் இலக்கம் 31, 7, பெபிலியான வீதி, நெதிமால, தெஹிவளை என்ற முகவரியில் ‘D marc solution (PVT) LTD’ என்ற பெயரில் ஒப்பந்த நிறுவனத்தை நடத்தி வந்ததுடன், அதன் உரிமையாளர்களாகவும் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 31 வயதுடைய விக்னேஸ்வரன் கணேசன் எனவும், பெண் சந்தேகநபர் 36 வயதான ரேவல் நிரோஷனி ராஜரத்தினம் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுதிகாரியின் – 071 – 8137373 அல்லது 011 2852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்