அதுருகிரிய பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த சிறுமி ஹோமாகம முல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், புதன்கிழமை (18) பாடசாலை முடிந்து தனது வீட்டில் தனது நண்பர்களுடன் படித்துக் கொண்டிருந்த போது திடீரென கையில் வலி ஏற்பட்டதாக சிறுமி தனது தாயாருக்குத் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாய் தனது கை வலிக்கு வீட்டில் மருந்து கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார், அதன் பிறகு மாணவி நண்பர்களுடன் படிக்கத் திரும்பிய நேரத்தில் அது பெரிதாகத் தெரியவில்லை, ஆனால் திடீரென்று வாந்தி எடுக்கத் தொடங்கி, பின்னர் மயக்கமடைந்து சரிந்தார்.
உடனடியாக சிறுமி ஒருவல மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் வைத்தியர்கள் பரிசோதித்த பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.