25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
உலகம்

இஸ்ரேலின் கொடூரத்தை ஏற்க முடியாது!

இஸ்ரேல் கொடூரமான முறைகளைப் பயன்படுத்தி பதிலடி கொடுக்கிறது, இதை எற்க முடியாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை  தெரிவித்தார்.

1,300 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற ஹமாஸ் போராளிகளின் வார இறுதித் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசா பகுதியை முற்றுகையிட்டு வான்வழித் தாக்குதல்களால் தாக்கிய மத்திய கிழக்கில் “நிகழ்வுகளின் தர்க்கத்தை” ரஷ்யா புரிந்து கொண்டுள்ளது என்று புடின் செய்தியாளர்களிடம் கூறினார்.

கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கிற்கு விஜயம் செய்த புடின், “இஸ்ரேல் பெரிய அளவில் மற்றும் மிகவும் கொடூரமான முறைகளுடன் பதிலடி கொடுக்கிறது” என்று கூறினார்.

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியால் சோவியத் நகரமான லெனின்கிராட் (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) முற்றுகையிடப்பட்டதை தற்போதைய காசாவுடன் ஒப்பிட்டார். “அமெரிக்காவில் கூட” காஸாவின் காட்சிகள் விவாதிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

“என் பார்வையில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று புடின் கூறினார். “2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு வாழ்கின்றனர். அவர்கள்  ஹமாஸை ஆதரிக்கின்றனர். ஆனால், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் அவதிப்பட வேண்டியுள்ளது. நிச்சயமாக இதை யாரும் ஒப்புக்கொள்வது கடினம்.

நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று புடின் மீண்டும் வலியுறுத்தினார், ரஷ்யா இரு தரப்புடனும் உறவுகளைக் கொண்டிருப்பதால் உதவ முடியும் என்று கூறினார்.

முன்னதாக, காசாவில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்துவது “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத” எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்பிற்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

ரஷ்யாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் பாரம்பரியமாக வலுவாக உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்

east tamil

சுவீடன் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

east tamil

அமெரிக்க கைதிகளை நரகத்திற்கு அனுப்பும் திட்டம்

east tamil

Leave a Comment