24.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
கிழக்கு

மட்டு.சிறுவர் இல்லத்தில் சம்பவம்: ஹெயார் பின் மூலம் ஜன்னல் கம்பியை அகற்றி தப்பிச்சென்ற 3 சிறுமிகள்!

மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14, 15 மற்றும் 16 வயதுடைய இந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை மற்றும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள் இந்த சிறுமிகள். அவர்கள் தலைக்கு அணியும் கிளிப் (hair pin) மூலம் தங்கியிருந்த அறை யன்னலின் இரும்பு கிரில்லை அகற்றி, ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்போது பெய்த கனமழை காரணமாக சிறுமிகள் தப்பியோடியதை சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பு அதிகாரி கவனிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமிகள் கடந்த ஆறு மாதங்களாக இந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நன்கு திட்டமிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மூன்று சிறுமிகளையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு தடையுத்தரவு!

east tamil

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்ட 77வது தேசிய சுதந்திர தினம்

east tamil

ஏறாவூர் நகரசபையில் 77வது சுதந்திர தின நிகழ்வுகள்

east tamil

Leave a Comment