தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று மூடப்படவுள்ளன.
மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர பதுளை மாவட்டத்தில் உள்ள மதுபானசாலைகளும் இன்று மூடப்படும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
அந்தந்த பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.
இதேவேளை, திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1