Pagetamil
இலங்கை

அடுத்த சில நாட்களில் உயர்தர பரீட்சை முடிவு வெளியாகும்!

இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் 2,438 பரீட்சை மையங்களில் மொத்தம் 345,242 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.

இம்மாதம் 15 ஆம் திகதி பெறுபேறுகளை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் முன்னதாக தெரிவித்தார்.

விரைவில் முடிவு வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

“அநேகமாக இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் முடிவு வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!