Pagetamil
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல் இன்று ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இலங்கை இன்று (24) காலை தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடலை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தது.

பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தலைலமையிலான குழு இலங்கையில் சில நாட்கள் தங்கியிருக்கும்.

வருங்கால IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் மீது பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை விரைவில் செயற்படுத்தும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கிறது.

இலங்கையின் பொதுக் கடன் நீடிக்க முடியாதது என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், EFF திட்டத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்கு, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இலங்கையின் கடனாளிகளால் போதுமான உத்தரவாதம் தேவைப்படும் என IMF தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை இந்த தூதுக்குழுவினர் நாட்டில் தங்கியிருப்பார்கள்.

இலங்கை தரப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று பேச்சில் கலந்து கொள்ளும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

உண்டியல் குலுக்கி மீண்டும் கல்லா கட்ட நினைக்கும் ஊசிக்கோஸ்டி!

Pagetamil

சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டாமென அறிவித்தல்

Pagetamil

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!