27.5 C
Jaffna
February 5, 2025
Pagetamil
கிழக்கு

யானை தாக்குதலில் 6 மாத குழந்தை பலி!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளக்காடு பிரதேசத்தில் யானை தாக்குதலினால் 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று (08) இந்த சம்பவம் நடந்தது.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதம் கொண்ட சுதர்சன் சதுர்சன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தம்பதி, பள்ளக்காடு பிரதேசத்தில் தங்கியிருந்து அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முதலாளி ஒருவரின் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை  வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் பாயில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த யானை மரத்தின் கீழ் படுத்திருந்த குழந்தையை தாக்கியதையடுத்து குழந்தை சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த குழந்தையை அங்கிருந்து மீட்டு அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment