28.5 C
Jaffna
April 14, 2025
Pagetamil
உலகம்

ருவிட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க்

ருவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் வாங்கிய தொழிலதிபர் எலான் மஸ்க் தற்போது அந்நிறுவனத்தை 44 பில்லியன் டொலருக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ருவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை கடந்த சில வாரங்களுக்கு முன் வாங்கினார். கடந்த 9ஆம் திகதி, ருவிட்டர் இயக்குனர் குழுவில் எலான் மஸ்க் இணைவதாக இருந்தது.

இந்நிலையில் ருவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரு தரப்புக்கும் இடையே முதற்கட்ட பேச்சு நடைபெற்றுள்ளது.

கடந்த 14ஆம் திகதியன்று எலான் மஸ்க், ஒரு பங்கு 54.20 டொலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 இலட்சம் கோடி ரூபாய்க்கு ருவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். ருவிட்டர் நிறுவனத்துடன் முதல் கட்ட பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து , 44 பில்லியன் டொலருக்கு ருவிட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ருவிட்டரை எலன் மஸ்க் முழுமையாக வாங்கியதால், பங்கு சந்தையில் டுவிட்டரின் விலை 3 இலட்சம் கோடி வரை உயர்ந்தாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!