Pagetamil
உலகம்

இடுகாட்டில் நடனமாடிய 3 இளம்பெண்கள் கைது!

ஈரானில் உள்ள இடுகாட்டில் 3 இளம்பெண்கள் நடனமாடிய காணொளி ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை அவர்களைக் கைது செய்துள்ளதாக நெய்ஷாபூர் நகரில் உள்ள அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நெய்ஷாபூரின் தியாகிகள் அடக்கம் செய்யப்பட்ட இடுகாட்டில் ஆடிய மூவரை அடையாளம் செய்து கைதுசெய்யுமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார்.

தியாகிகளின் குடும்பத்தினரின் உணர்வுகள் புண்பட்டதாக வழக்கறிஞர் முகமது ஹொசைனி கூறினார்.

சமுதாய வழக்கங்களுக்கு எதிரான செயலைச் செய்ததற்காக மூவரும் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தாகவும் அவர் கூறினார்.

ஈரானில் நடனமாடுவது குற்றமல்ல. ஆனால் பொது இடங்களிலோ இணையத்திலோ பொது நாகரிகத்தை புண்படுத்தும் வகையில் சிலர் நடனமாடினால் அவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

ட்ரம்பின் “விடுதலை தின” வரிகள் அறிவிப்பு: சுண்டங்காய் சைஸ் இலங்கைக்கு இவ்வளவு பெரிய வரியா?

Pagetamil

கழிப்பறையில் வாழும் சீன யுவதி

Pagetamil

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000ஐ கடந்தது!

Pagetamil

ட்ரம்ப்- புடின் தொலைபேசி உரையாடல்: 30 நாள் எரிசக்தி கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புதல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!