Pagetamil
குற்றம்

15 சங்கிலி அறுத்தவர் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 15 தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபர் நேற்று காலை பொல்கஹஹேன சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவர் மற்றும் சங்கிலிகளை விற்பனை செய்ய உதவிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதுவத்த, ராகம, கந்தானை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் வசிக்கும் 28- 42 வயதிற்கிடைப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பிரதான சந்தேக நபருக்கு எதிராக மஹர, கம்பஹா, வெலிசறை மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.

சந்தேக நபரை கைது செய்ய வெலிசர மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து 34 கிராம் தங்கமும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தந்தையும், மகனும் குத்திக்கொலை!

Pagetamil

மசாஜ் நிலைய அழகியில் காதல் கொண்ட இருவர்; பின்னர் நடந்த கொடூர குற்றம்: யுவதி உள்ளிட்ட 4 பேர் கைது!

Pagetamil

3வது காதலா?: 2வது காதலனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நிகழ்ந்த விபரீதம்!

Pagetamil

15 வயது சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து பாலியல் பலாத்காரம்

Pagetamil

தொலைபேசியில் அறிமுகமான 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய நடத்துனர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!