பெஷாவரின் கொச்சா ரிசல்தார் பகுதியில் வெள்ளிக்கிழமை ஷியா மசூதிக்குள் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டதாகவும் 194 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லேடி ரீடிங் மருத்துவமனையின் (எல்ஆர்ஹெச்) செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம், காயம் அடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
தாக்குதல் தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
பிரதான நுழைவாயிலுக்கு வெளியே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு காவல்துறையினரை நோக்கி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் காமடைந்தார்.
தடுக்க முயன்ற ஒரு நபர் மீதும், தற்கொலைதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, வெள்ளிக்கிழமை தொழுகைக்காக வழிபாட்டாளர்கள் கூடியிருந்த மசூதிக்குள் நுழைந்து குண்டை வெடிக்க வைத்தார்.
இந்த தாக்குதலிற்கு சுமார் ஐந்து முதல் ஆறு கிலோகிராம் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
قصہ خوانی بازار کے کوچہ رسالدار شیعہ جامع مسجد میں دو حملہ آور نے گھسنے کی کوشش کی
ڈیوٹی پر موجود پولیس اہلکاروں پر فائرنگ ہوئی ہے
فائرنگ سے ایک پولیس جوان شہید جبکہ دوسرا زخمی ہوا ہے جس کی حالت تشویشناک ہے
پولیس ٹیم پر حملہ کے بعد جامع مسجد میں دھماکہ ہوا ہے
1/2 pic.twitter.com/9gwfHSsPuG
— Capital City Police Peshawar (@PeshawarCCPO) March 4, 2022