28.5 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

யாழில் சைவ ஆலயங்களில் சிலை திருட்டு விவகாரம்: இராணுவச்சிப்பாய் கைது!

வலிகாமம் வடக்கில் சைவ ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்ட விவகாரத்தில் காங்கேசன்துறை இராணுவ முகாமை சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பொலிசாரால் நேற்று (3) இரவு இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டார்.

வலிகாமம் வடக்கிலுள்ள சைவ ஆலயங்களில் இருந்து கடவுள் விக்கிரகங்கள், சிலைகள் திருடப்படும் விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிசார், கொழும்பிற்கு கடத்தப்பட்ட சுமார் 20 விக்கிரகங்களை மீட்டனர்.

விக்கிரம திருட்டுன் தொடர்புடைய பழைய இரும்பு வியாபாரியான, நல்லிணக்கபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதானார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நவாலியை சேர்ந்த மற்றொருவர் கைதானார்.

அவர்களின் வாக்குமூலத்தில், இந்த திருட்டு விவகாரத்தில் இராணுவச்சிப்பாய்கள் சிலர் தொடர்புபட்டிருந்தது தெரிய வந்திருந்தது.

இதனடிப்படையில், நேற்று காங்கேசன்துறை இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!