Pagetamil
இலங்கை

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் BTI பாக்டீரியா வெற்றிகமானதல்ல!

BTI பக்டீரியா டெங்கு தடுப்புக்கான வெற்றிகரமான முறையல்ல என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பருவ மழை மற்றும் அதனைத் தொடர்ந்து நுளம்புகள் பரவி வருகின்ற போதிலும் டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என அவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பி.டி.ஐ பாக்டீரியா இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா, அல்லது அதனைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்ததா என பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், கொள்முதல் விவரங்கள் ஏதேனும் இருந்தால், சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து வெளியிடப்படும் என்று பதிலளித்தார்.

BTI பாக்டீரியா டெங்கு தடுப்புக்கான ஒரு வெற்றிகரமான முறையல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

இதையும் படியுங்கள்

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

Pagetamil

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!