31.9 C
Jaffna
April 28, 2024
சினிமா

சமந்தாவிற்கு நீதிமன்றம் வழங்கிய அறிவுரை!

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்ததையடுத்து அவரது விவாகரத்து குறித்து ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக கருத்து சொல்பவர்கள் மீது சமந்தா சமீபத்தில் வழக்கு தொடுத்தார் என்பது தெரிந்ததே. இந்த வழக்கு இன்று ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட அவர்களை சமந்தா மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம் என்று நீதிபதி அறிவுரை கூறினார்.

மேலும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கை விவரங்களை பொது தளத்தில் பகிர்ந்து கொண்டு அதன்பின் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள் என்றும் அவர் கருத்து கூறினார்.

இந்த நிலையில் சமந்தாவின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை அடுத்து கோபமடைந்த நீதிபதி, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது என்றும், சமந்தா வழக்கை நடைமுறைப்படி தான் விசாரிக்க முடியும் என்றும், இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும் என்றும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

Pagetamil

“வரிகள் இல்லை எனில் பாடல் இல்லை” – இளையராஜா மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

Pagetamil

அசோக் செல்வனின் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ டீசர்

Pagetamil

‘கும்முனு இருந்ததால் பார்த்ததும் மூட் வந்து விட்டது’: பின்னால் வந்து பிடித்த இயக்குனர்: நடிகை அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

லோகேஷ் கனகராஜ் – ரஜினியின் ‘கூலி’ பட அறிவிப்பு

Pagetamil

Leave a Comment