Pagetamil
இலங்கை

90 தொன் ஒட்சிசனுடன் கொழும்பை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல்!

ஒட்சிசனை ஏற்றியபடி வந்த இந்திய கடற்படை கப்பலான சக்தி, இன்று (23) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, 90 தொன் ஒட்சிசனுடன் இந்தக் கப்பல் கடந்த 19ஆம் திகதி பயணத்தை தொடங்கியிருந்தது.

இதேவேளை, சென்னை துறைமுகத்தில் 39 தொன் ஒட்சிசனை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இலங்கை கடற்படை கப்பலான சக்தி, நாட்டை நெருங்குகிறது என்று கடற்படை செய்தி தொடர்பாளர் கப்டன் இந்திகா டி சில்வா கூறினார்.

இதற்கிடையில், மருத்துவமனைகளில் அதிகரித்துவரும் ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்ய திரவ ஒட்சிசனை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென் ஹாங்குடனான சந்திப்பின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!