24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

போதைப்பொருளுடன் கைதான இளைஞர்களை சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற 17 வயது இளைஞர்கள் இருவரை மடக்கிய பொலிசார், அவர்களிடம் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரான்ஸின், நைஸ் (Alpes-Maritimes) என்ற இடத்தில் கடந்த ஞாயிறு மாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடமையிலிருந்த பொலிசாரை கண்டதும், இளைஞர்கள் அங்கிருந்து விரைவாக நழுவிச் செல்ல முயன்றனர். இதனையடுத்து உசாரடைந்த பொலிசார், அவர்களை பிடித்து சோதனையிட்டனர்.

ஒரு இளைஞன் கையிலிருந்த பொதியை தரையில் வீசினான். அதில் யூரோக்கள், கொக்கெயின், கஞ்சா என்பன விற்பனைக்காக பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டன.

மற்றைய இளைஞனும் பொதியொன்றை வீசினான். அதை சோதனையிட்ட பொலிசார் அதற்குள் மலைப்பாம்பு ஒன்றை மீட்டனர்.

தனது நண்பருக்கு சொந்தமானது என அவர் கூறினாலும், மலைப்பாம்பின் பெயரையும் அவர் அறிந்திருக்கவில்லை.

இருவரும் பொலிசாால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment