25 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் நில அளவைக்கு தென்கொரிய நிறுவனம்!

கொரியாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊடாக இரகசியமாக நாட்டில் நில அளவீட்டு திட்டத்தை தொடங்க அரசாங்கம் தயாராகி வருவதாக அரச அளவையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சங்கத்தின் தலைவர் துமிந்த பண்டார, மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், முன்னாள் அரசாங்கம் இந்த திட்டத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் செயல்படுத்த முயன்றது, திட்டத்தின் நோக்கம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று கூறினார்.

இது தொடர்பான ஆவணம் 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டதாக பண்டார கூறினார்.

தொடர்புடைய நடவடிக்கைகள் இரகசியமாக எடுக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார். திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று குறிப்பிட்டார்.

காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறினார்.

இது நில அளவீட்டுத் திட்டம் அல்ல, தென் கொரியாவின் உதவியுடன் இலங்கை அளவிடும் கருவிகளைப் பெற உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment