வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இருவர்

Date:

மிரிஹான, ஜூபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் பல நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்த அயலவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (08) வீட்டிற்குச் சென்றபோது, ​​வீட்டின் அறையொன்றில் உள்ள படுக்கையில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

வீட்டின் சமையலறை மாடியில் பெண் ஒருவரின் நிர்வாண சடலமும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

80 வயதுடைய முதியவரும், 96 வயதுடைய பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.

இது குற்றமா அல்லது இயற்கை மரணமா என மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்