யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் யாழ்ப்பாணம் பொலீஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்று யாழ்ப்பாணம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது 120 மில்லி கிராம் நிறையுடைய கெரோயின் கைது செய்யப்பட்டவரிடமிருந்து பொலிசார் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.




