மனைவியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் ரயில் மோதி பலி!

Date:

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (10) இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த நாகேந்திரன் கரிகரராஜ் (23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, நேற்றிரவு தண்டவாளத்தில் நின்று மனைவியுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, சடலத்தை மீட்டு ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர், ரயில் கொழும்பு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான வழிகளை பென்டகன்...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு...

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்