இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர் இன்று மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
வழக்கமான பயிற்சிப் பயணத்திற்காக ஹிங்குரக்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட விமானம், சிரமங்களை சந்தித்து கீழே விழுந்தது.
விமானத்தில் பயணித்த விமானிகள் உள்ளிட்ட 12 பேரும் காயமின்றி மீட்கப்பட்டதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.