கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து கொட்டஹேனா ராஜேஸ்வரி கல்வி நிலையம் வரை போராட்டம் நடந்தது.
மேற்படி பாடசாலையில் மாணவி துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். குறித்த ஆசிரியரின் நண்பரான தனியார் கல்வி நிலைய ஆசிரியர், தனது பாடசாலையில் கல்வி கற்ற அம்ஷிகாவை மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தியுள்ளார்.
குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
எனவே அந்த மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.