சுங்கக் கட்டளைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த விவாதத்தின் போது, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் இன்று (மே 8) மதியம் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தலைமை உறுப்பினரின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை அர்ச்சுனா கணக்கெடுக்காமல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை குழப்பியதையடுத்து, அவர் வெளியேற்றப்பட்டார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் சீர்குலைத்ததற்காகவும், அவருக்கு ஒதுக்கப்பட்ட உரை நேரத்தை இடையூறு செய்ததற்காகவும், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, அர்ச்சுனாவை கடுமையாகக் கண்டித்தார்.