மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Date:

அனுராதபுர சிறுவர் காப்பகத்தில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் 17 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 49 வயதுடைய முன்னாள் நன்னடத்தை மற்றும் சிறுவர் திணைக்கள பராமரிப்பு ஆணையாளர், 57 வயதான சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவின் தகவலின்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில், காவல்துறையினர் மாணவி மற்றும் காப்பக அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.

விசாரணைகள் முடிந்ததும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரானின் 2 நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைமை இரண்டும் போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை பகிரங்கமாக...

11 அணுகுண்டுகளை தயாரிக்கப் போவதாக நாம் சொல்லவேயில்லை… ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்!

அணு குண்டுகளை உருவாக்க யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரானியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்க...

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்