Pagetamil
இலங்கை

கொட்டாஞ்சேனை கொலை: ஒருவர் தடுத்து வைப்பு!

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கொட்டஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு 15, மெத்சந்த செவன வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த பசிந்து விராஜ், கொழும்பு கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி பதிராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பொலிசார் இதனை தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் இந்த சந்தேக நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவுக்கு வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Pagetamil

யாழில் ஜேவிபி வேட்புமனு தாக்கல்

Pagetamil

இலங்கைத் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் சொத்து என எடுத்தியம்ப ஒரு வாய்ப்பு – சுமந்திரன் கருத்து

Pagetamil

ஈ.பி.டி.பி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil

Leave a Comment