ரயிலில் செல்ஃபீ எடுத்த ரஷ்ய பெண் பலி

Date:

ரயிலில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே ரயிலிலிருந்து இன்று (19) காலை தவறி விழுந்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரயில் சுரங்க பாதையை கடந்து, அமுனுவெல்பிட்டிய பகுதியில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது, குறித்த பெண் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம், பயணித்த அதே ரயிலில் ஹாலி எல ரயில் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அனுதாபகரமான சம்பவம் தொடர்பாக ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்