29.8 C
Jaffna
March 26, 2025
Pagetamil
இலங்கை

ரயிலில் செல்ஃபீ எடுத்த ரஷ்ய பெண் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே ரயிலிலிருந்து இன்று (19) காலை தவறி விழுந்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரயில் சுரங்க பாதையை கடந்து, அமுனுவெல்பிட்டிய பகுதியில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது, குறித்த பெண் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம், பயணித்த அதே ரயிலில் ஹாலி எல ரயில் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அனுதாபகரமான சம்பவம் தொடர்பாக ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் அதிக போதையால் உயிரிழந்த இளைஞன்!

Pagetamil

வியாழேந்திரன் விளக்கமறியலில்!

Pagetamil

லெஜண்ட் கிரிக்கெட் ஆட்டநிர்ணய சதியில் இந்திய மேலாளருக்கு 4 வருட சிறை!

Pagetamil

‘ஒரு கட்டத்துக்கு மேல் பேச்சில்லை… வீச்சுத்தான்’: அர்ச்சுனா இல்லாத நேரத்தில் சந்திரசேகரன் வீறாப்பு!

Pagetamil

பக்குவப்படாத அர்ச்சுனா எம்.பியானதன் விளைவு: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்!

Pagetamil

Leave a Comment