கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

Date:

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில், பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் நிலையங்களுக்கான கள விஜயம் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று (07) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சமூக மட்ட பெண் தலைமைத்துவ தலைவர்கள் 30 பேரை கொண்ட குழுவால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளீதரன் இந்த கள விஜயத்தை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார். இதன்போது, கிளிநொச்சி பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவு, நீதிமன்ற வளாகம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நட்பு நிலையம், பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையம் ஆகிய சேவை வழங்கும் இடங்களுக்கு குறித்த குழு விஜயம் மேற்கொண்டது.

இந்த சேவை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக சமூக மட்ட தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்