ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதியாகியுள்ளது.
நேற்று (03) மொஸ்கோவில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். இக் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஆதரவு படைக்குழுவின் தலைவர் ஆர்மென் சர்கிஸ்யானும் அவரது பாதுகாவலரும் பலியானதை ரஷ்யா உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளது.
உக்ரைன் அரசால் தேடப்படும் நபரான ஆர்மென் சர்கிஸ்யான் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான உக்ரைனின் டோனெட்ஸ்க்கில் படைப்பிரிவை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்ததக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1