27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

நாட்டில் முதல் முறையாக குரங்குகள் கணக்கெடுப்பு

நாட்டில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கணக்கெடுப்பு மாவட்ட மட்டத்தில் எதிர்வரும் 15 அல்லது 22ம் திகதிகளில் நடத்தப்படும் என தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு குரங்குகளினால் இலட்சக்கணக்கான தேங்காய்கள் அழிக்கபட்டதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குரங்குகளின் எண்ணிக்கையை சரியான முறையில் கணக்கெடுத்து அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை அவசியமாகியுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் இணைந்து பணியாற்றவுள்ளன.

துல்லியமான தரவுகளை சேகரிப்பதன் மூலம் குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும், தென்னைப் பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கும் இது உதவியாக இருக்கும் என சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment