27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், மூதூர் பகுதியில் உள்ள தாழ் நிலப்பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூதூர் கிழக்கு பகுதியின் சாலையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச் சேனை, சம்புக்களி, சேனையூர், சம்பூர் உள்ளிட்ட இடங்களிலும், மூதூர் தெற்கு பகுதியின் ஜின்னா நகர், பெரியபாலம் மற்றும் ஜாயா நகர் போன்ற பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது.

இந்த நிலைமையை சமாளிக்கவும், வெள்ளநீரை வடிந்து ஓடச் செய்யவும் மூதூர் பிரதேச சபையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சபை செயலாளர் நேரடியாக களத்திற்குச் சென்று இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இரு நாட்களாக தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன.

இந்த நடவடிக்கைகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை சீரமைக்கவும், அடுத்தடுத்த கனமழை காரணமாக மேலும் சிக்கல்களைத் தவிர்க்கவும் அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment