27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி

திருகோணமலையில் அதிகபட்சமாக 178.0 மி.மீ, நவகிரியில் 92.0 மி.மீ மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, மட்டக்களப்பு 48.3 மி.மீ, நவகிரி 92.0 மி.மீ, தும்பங்கேணி 88.0 மி.மீ, உன்னிச்சை 46.7 மி.மீ, ரூகம் 59.5 மி.மீ, வாகனேரி 27.5 மி.மீ, கட்டுமுறிவு குளம் 39.0 மி.மீ வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, திருகோணமலையில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 178.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், உன்னிச்சை மற்றும் நவகிரி உள்ளிட்ட பெரிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், ஆற்றங்கரை மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகரித்தால், பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

மேலும், கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுதல் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் இன்று காலை 106.6 அடிவரை உயர்ந்துள்ள நிலையில், 5 கதவுகள் 6 அங்குலங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீர்மட்டம் மேலும் அதிகரித்தால், கதவுகள் 12 அங்குலங்கள் திறக்க வேண்டிய நிலை உருவாகலாம்.

அதற்கமைய, மழைநீர் மூழ்கக்கூடிய பாதைகளில் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment