27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (TID) தளம் அமைப்பினர் விசாரணை

திருக்கோணமலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று (16.01.2025) மதியம் ஒரு மணியளவில் திருக்கோணமலையில் செயற்பட்டு வருகின்ற சமூக மட்ட அமைப்பான தளம் அமைப்பின் அலுவலகத்தில், அமைப்பின் இயக்குனர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ச்சியான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டு, சென்றுள்ளனர்.

தளம் அமைப்பானது திருக்கோணமலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இளையோரின் திறன் விருத்தி தொடர்பில் செயல்பட்டு வருகின்ற சமூக மட்ட அமைப்பாகும். இந்த அமைப்பானது சுயமான நிதி பங்களிப்பு மற்றும் சமூகமட்ட ஒத்துழைப்புகளுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இளையோரின் வாழ்க்கை திறன் விருத்தி, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில்நுட்பத்திறன்கள், சுயதொழில் போன்றவை தொடர்பில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் நிலையில் இவ்வாறான அச்சுறுத்தலால் செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதிய அரசாங்கத்திலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவது மன வருத்தத்தை அளிப்பதாக தளம் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment