27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
இலங்கை

அடுத்த மாதம் முதல் புதிய அடையாள அட்டைகள் டிஜிட்டல் வடிவில்

அடுத்த மாதம் முதல் அனைத்து புதிய அடையாள அட்டைகளும் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று (14.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது, “அடையாள அட்டைகளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் . டிஜிட்டல் மயமாக்கலின் மூலம், அடையாள அட்டைகளின் பயன்கள் பலமடங்காக உயர்த்தப்படும்” என்றார்.

இந்த திட்டத்துக்கான செலவினம் சுமார் 20 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதில் பாதியை இந்திய அரசின் உதவியால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“இந்த திட்டம் அரசின் நிர்வாக செயல்திறனை அதிகரிக்க மட்டும் அல்ல, பொதுமக்களுக்கு மேலதிக சேவைகளை வழங்கவும் பெரிதும் உதவும். அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும்” என பிரதி அமைச்சர் வெகுமதி அளித்தார்.

தற்காலிக மின்னணு அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடைமுறைகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இதனால் அடையாள அட்டை தொடர்பான அனைத்து சிரமங்களும் அகற்றப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி, இலங்கையின் டிஜிட்டல் மாற்றப் பாதையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காலாவதியான தீயணைப்புக்கருவியால் வைத்தியசாலையில் பதற்றம்

east tamil

யோஷித, பாட்டி மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

Pagetamil

கஜேந்திரகுமாருக்கு பிணை

Pagetamil

மதுபானசாலைக்கு எதிராக பூநகரியிலும் போராட்டம்

east tamil

நாமலின் சட்ட படிப்பு குறித்து CID விசாரணை

east tamil

Leave a Comment