போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

Date:

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வத்திக்கானில் வெளிநாட்டு தூதர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த நடைமுறைப்படி, 2025 ஆண்டுக்கான நிகழ்வு நேற்று (09) வத்திக்கானில் நடைபெற்றது.

பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் போது, கரகோஷங்களுடன் உரையை ஆரம்பித்த 88 வயதான போப் ஆண்டவர், சில வரிகளுக்குப் பின்னர், தான் சளி காரணமாக பேச முடியாத நிலைமையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதன்படி, தன்னுடைய நீண்ட உரையை அவருடைய உதவியாளர் வாசித்தார். இதனால் நிகழ்ச்சி சாதாரணமாகவே முடிவடைந்தது.

போப் பிரான்சிஸ் அண்மைக் காலமாக வயோதிகத்தால் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் முந்தைய நிகழ்வுகளிலும் சில வேலைகளை உதவியாளர்களின் உதவியுடன் மேற்கொண்டார்.

வத்திக்கானின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உலக அமைதி தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்வு, கத்தோலிக்க திருச்சபையின் சர்வதேச தொடர்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில், போப் ஆண்டவர் உரையை உதவியாளர் மூலம் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அவர் உடல்நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலிமுகத்திடல் மின்கம்பத்தில் ஏறி போராடிய இளைஞன்!

"களனி விகாரையில் தியானம் செய்துவிட்ட வந்த போது நான் பொலிசாரால் கைது...

சர்ச்சைப் பிக்கு சிறைக்குள்ளும் சலசலப்பு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது: ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்