26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
உலகம்

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வத்திக்கானில் வெளிநாட்டு தூதர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த நடைமுறைப்படி, 2025 ஆண்டுக்கான நிகழ்வு நேற்று (09) வத்திக்கானில் நடைபெற்றது.

பல நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் போது, கரகோஷங்களுடன் உரையை ஆரம்பித்த 88 வயதான போப் ஆண்டவர், சில வரிகளுக்குப் பின்னர், தான் சளி காரணமாக பேச முடியாத நிலைமையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதன்படி, தன்னுடைய நீண்ட உரையை அவருடைய உதவியாளர் வாசித்தார். இதனால் நிகழ்ச்சி சாதாரணமாகவே முடிவடைந்தது.

போப் பிரான்சிஸ் அண்மைக் காலமாக வயோதிகத்தால் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் முந்தைய நிகழ்வுகளிலும் சில வேலைகளை உதவியாளர்களின் உதவியுடன் மேற்கொண்டார்.

வத்திக்கானின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உலக அமைதி தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்வு, கத்தோலிக்க திருச்சபையின் சர்வதேச தொடர்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில், போப் ஆண்டவர் உரையை உதவியாளர் மூலம் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அவர் உடல்நிலை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் குற்றச்சாட்டில் இங்கிலாந்து அமைச்சர்

east tamil

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்?

Pagetamil

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

Leave a Comment