தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

Date:

திருகோணமலை நகரைச் சுத்தமாக்கும் நோக்கில் செயலாளர் தே. ஜெயவிஷ்ணு அவர்களின் ஆலோசனையின் கீழ், பதில் கணக்காளர் திரு C. புவனதாசன் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு N. பரமேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் நேற்று (08.01.2025) மனையாவெளி முதல் மடத்தடி சந்தி வரை விசேட திண்மக்கழிவகற்றல் சேவை இடம்பெற்றது.

இந்நிலையில், நேற்று சில பகுதிகள் தவறவிடப்பட்ட காரணத்தால், இன்றும் (09.01.2025) இச்சேவை தொடர்ந்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உவர்மலை, இலிங்கநகர், அன்புவழிபுரம் போன்ற பகுதிகளிலும் பணியாளர்கள் வருகை தந்து திண்மக்கழிவுகளை அகற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பொதுமக்கள் தங்களது வீட்டுக்கழிவுகளை உரிய முறையில் சேகரித்து வரும் வாகனங்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், ஏனைய பகுதிகளில் வழமையான திண்மக்கழிவகற்றல் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இது தொடர்ச்சியாக நகர சுத்தம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்