25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து காணாமல் போன பொருட்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து அண்மைய காலங்களாக காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பதோடு, இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும், காணாமல் போன பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன பொருட்கள் பற்றிய விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன், நீதிமன்றத்திற்கு பட்டியலை சமர்ப்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக்க, விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

இந்தியர் என நினைத்து பிடித்த யாழ் ஐயரை விடுவிக்க இலஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி!

Pagetamil

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

Pagetamil

இந்திய தூதரிடம் வலைகளை வாங்கி தமது உறவினர்களுக்கு மட்டும் கொடுத்த மீனவ பிரதிநிதிகள்

east tamil

பெற்றா மலிவு விலை கலர் லைட்… தங்கத்துடன் கிளுகிளுப்பான கொழும்பு பயணத்தில் மாட்டிய அர்ச்சுனா: அனுராதபுரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

Pagetamil

Leave a Comment