அஹுங்கல நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அஹுங்கல பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்




