26.5 C
Jaffna
January 16, 2025
Pagetamil
கிழக்கு

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

கேரளா கஞ்சாவுடன் வீதியில் பயணம் செய்த 34 வயது சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு தொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதவன் வீதி பகுதியில் திங்கட்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை 03 சின்னத்தம்பி வீதியை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டவராவார்.

மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழுகிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம்

east tamil

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (TID) தளம் அமைப்பினர் விசாரணை

east tamil

லண்டன் கனக துர்க்கை அம்மன் அறக்கட்டளை நிதியுடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

east tamil

மூதூரில் மற்றுமொரு யானை உயிரிழப்பு

east tamil

உவர்மலையில் கன்று விபத்து – உரிமையாளருக்கு அறியப்படுதவும்

east tamil

Leave a Comment