25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இலங்கை

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடிரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இச் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொது மக்களும் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

இந் நிலைமையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம ஏற்படுத்தப்பட்டு ஐனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த சோதனைச் சாவடிகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன.

இவ்வாறான நிலைமையில் அன்று திடிரென அகற்றப்பட்ட அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாற்றம் என்று கூறி புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசாங்கம் சோதனைச் சாவடிகளை தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைக்கின்ற இந்த நடவடிக்கை தொடர்பில் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று தான் நீண்ட காலமாக பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமை அகற்றுவதாக கூறிய போதும் இதுவரையில் அகற்றப்படாத நிலைமையே உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இந்த விடயத்தில் ரணில், கோட்டா சிறப்பு: அனுர பாராட்டு!

Pagetamil

இந்தியர் என நினைத்து பிடித்த யாழ் ஐயரை விடுவிக்க இலஞ்சம்: வசமாக சிக்கிய அதிகாரி!

Pagetamil

மாணவி கடத்தல் விவகாரம்: அசமந்தமாக செயற்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்!

Pagetamil

இந்திய தூதரிடம் வலைகளை வாங்கி தமது உறவினர்களுக்கு மட்டும் கொடுத்த மீனவ பிரதிநிதிகள்

east tamil

பெற்றா மலிவு விலை கலர் லைட்… தங்கத்துடன் கிளுகிளுப்பான கொழும்பு பயணத்தில் மாட்டிய அர்ச்சுனா: அனுராதபுரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

Pagetamil

Leave a Comment