Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

Date:

திருக்கோவில் தாண்டியடி – உமிரி கடலில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் சடலம் இன்று(26.12.2024) மீட்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கி மூவர் காணாமல் போயிருந்த நிலையில், திருக்கோவில் பகுதியில் 17 வயதான சிறுவனின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் – தாண்டியடி உமிரி கடலில் நேற்றைய தினம் (25.12.2024) நீராடச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அவர்களை காப்பாற்றச் சென்ற 38 வயதான நபரும் இதன்போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே கடலில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த நபர் மற்றும் 15 வயதான மற்றுமொரு சிறுவனையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்