இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Date:

திருமண விஷயத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

‘ஹலோ மம்மி’ என்னும் மலையாள படத்தை விளம்பரப்படுத்த ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி அளித்துள்ளார். அதில், திருமணம் குறித்த தனது பார்வை வெளிப்படுத்தி இருக்கிறார். “எனக்கு திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. 8, 10, 25 வயதில் கூட திருமணம் என்பது எனக்கு கனவு போன்றது. குருவாயூர் கோயிலில் திருமணம் செய்வதை நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால் நான் வளர்ந்த பிறகு என்னுடைய பார்வை மாறிவிட்டது. என்னை சுற்றி இருந்த திருமணம் ஆனவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளனர்.

எனக்கு இப்போது 34 வயது ஆகிறது. நான் பார்த்த ஒரே ஒரு குடும்பம் தான் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்கிறது. அவர்களும் மலையாளிகள் அல்ல. மற்றவர்கள் சமரசம் செய்து கொண்டு வாழ்வதை நான் பார்க்கிறேன். திருமணம் என்பது எனக்கானது இல்லை என்ற புரிதலும் விழிப்புணர்வும் எனக்கு ஏற்பட்டது. என்னுடைய அம்மாவிடம் ஒரு மேட்ரிமோனி கணக்கை தொடங்குமாறு கூறியிருந்தேன். நான் மேட்ரிமோனி இணையதளத்தில் இருந்தேன், ஆனால் மக்கள் அது போலி கணக்கு என்று நினைத்துக் கொண்டனர்” என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்