தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொது
மக்களின் நீர்ப் பாவனையானது வழமைக்கு மாறான அதிகமாக காணப்படுகின்றது.
ஆதாவது கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட
மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும்
வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக இனிவரும் நாட்களில்
நீரினை மட்டுப்படுத்தப்பட்ட நேர ஒழுங்கில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவிவருவதன் காரணமாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதனடிப்படையில்
பூநகரி,பொன்னகர்,பாரதிபுரம்,விவே
காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை நீர் விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் குறைந்த அழுதத்திலும் நீர் விநியோகம் காணப்படுவதனால் பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது.