தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளருக்கு பிணை

Date:

எல்.பி.எல் 2024 கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் தம்புள்ளை தண்டர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான பிரித்தானிய, பங்களாதேஷ் பிரஜை தமீம் ரஹ்மானை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (07) உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு 05 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும், 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் வழங்க உத்தரவிடப்பட்டது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்த சந்தேகநபர் கடந்த 22ஆம் திகதி விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்