முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று கல்முனை நீதிமன்றில் நீக்கம் செய்யப்பட்டது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்த்தரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் விநாயகம் விமலநாதன் ஆகியோர் மீது பெரிய நீலவணை போலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட தடை உத்தரவு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றால் அகற்றப்பட்டது.
இந்த தடை உத்தரவை நீக்க கோரி குறித்த நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான சிவரஞ்சித் மற்றும் மதிவாணன், ரிபாஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். நீதிபதியால் உறவுகளை நினைவு கூறுவது தொடர்பாக சட்டத்துக்கு முரணில்லாத வகையில் நினைவு கூறுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.