திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

Date:

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை கடத்திய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது கடந்த சனிக்கிழமை (11) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அச்சந்தேக நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த மேலதிக விசாரணையில் பொத்துவில் பிரதேசத்தில் மற்றொரு சந்தேக நபர் தலைமறைவாகி இருப்பதாக தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இது தொடர்பாக பொத்துவில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை(12) திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலி சிறைக்குள் துப்பாக்கிச்சூடு

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல்...

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்