27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

‘அமெரிக்காவுடனான போருக்கு அஞ்சவில்லை’: ஈரான் புரட்சிகர காவலர் படை தளபதி!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கமாட்டோம். ஆனால் அமெரிக்காவுடனான நேரடி இராணுவ மோதலுக்கு ஈரான் பயப்படவில்லை என்று அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைமை தளபதி புதன்கிழமை கூறினார்.

“இந்த நாட்களில், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து சில அச்சுறுத்தல்களை நாங்கள் கேட்கிறோம், நாங்கள் கூறுகிறோம் … நாங்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலளிக்கவில்லை, நாங்கள் போரை நாட மாட்டோம், ஆனால் நாங்கள் போருக்கு பயப்பட மாட்டோம்,” என்று இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர் ஹொசைன் சலாமி கூறியதாக அரசு ஊடகம் கூறியது.

ஜோர்டானில் மூன்று அமெரிக்க துருப்புக்களைக் கொன்ற ட்ரோன் தாக்குதலுக்கு ஈரானை குற்றம்சாட்டி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் கருத்துக்களைத் தொடர்ந்து, சலாமியின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதற்கு ஈரான் தான் பொறுப்பு என்று பிடன் கூறினார். “தீவிரமான ஈரான் ஆதரவு போராளிக் குழுக்களால்” இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர் முன்பு கூறியிருந்தார்.

ஜோர்டானில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரான் மறுத்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. அதற்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் ஈரான் ஆதரவு போராளிகளால் 165 தடவைகளுக்கு மேல் தாக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் இறுதிக்கிரியையில் சர்ச்சை பதாகை: பொலிசில் முறைப்பாடு!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

east tamil

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

Leave a Comment