28.8 C
Jaffna
December 7, 2023
முக்கியச் செய்திகள் விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடர் இலங்கையிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்படுகிறது!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை போட்டித் தொடரை இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு மாற்றியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் இணையதளமான CricBuzz இன் அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளதாக CricBuzz தெரிவித்துள்ளது.

ஐசிசி தற்போது அகமதாபாத்தில் கூடி வருவதாகவும், விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்துவததென நவம்பர் 10 ஆம் திகதி எடுத்த முடிவை அங்கீகரிக்க நிர்வாகசபை முடிவு செய்துள்ளதாக அறிக்கை மேலும் கூறியது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) அகமதாபாத்தில் உள்ள ஐடிசி நர்மதாவில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் ஐசிசியின் வெளியேற்றப்பட்ட தலைவர் ஷம்மி சில்வா கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இலங்கை கிரிக்கெட்டின் ஊழல் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்தியரான ஜெய் ஸாவின் செல்வாக்கில் இலங்கையை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக வலுவான விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக்குழு!

Pagetamil

முன்னாள் விளையாட்டு அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கிரிக்கெட் நிர்வாகம் முறைப்பாடு!

Pagetamil

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil

சொந்த மண்ணில் முதன் முறையாக நியூஸிலாந்தை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது பங்களாதேஷ்!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை போட்டிக்கு 3 பேர் விண்ணப்பம்: திடீர் குழப்பத்தால் மீண்டும் கூடுகிறது மத்தியகுழு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!