28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

சிஐடி வாசலில் தேங்காய் உடைத்து சாபமிட்டவர் கைது!

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தெய்வ சாபம் வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்கள கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக தேங்காய் உடைத்த ‘மகேன் ரட்டாட’ அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்தவை கொழும்பு கோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் இதுவரை முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற போது கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் இருந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் அதிகாரிகள் நேற்று மஹவத்தை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் பல சிவில் ஆர்வலர்களும் சாலையோரம் இருந்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!